கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அடங்கிய புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட வடமாநில வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களில் மாதவரம் பகுதியில் பணிபுரிந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.