சென்னை: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வெளியிட்ட அறிக்கை: ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்று கோவிட் 19 காரணத்தால் ஈரானில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தமிழக மீனவர்கள் 750 பேர் தங்க வைக்கப்பட்டனர். இவர்களை மீட்க, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மற்றும் பல்வேறு மீனவர் அமைப்புகள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி வந்தன. மத்திய அரசு தனி கப்பல் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது.