சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்படுபவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறி இல்லாமல் பாதிப்பு உறுதி செய்ய வருபவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். பாதிப்பும் இல்லை என்றால் வீட்டு தனிமை அல்லது தனிமைப்படுத்துதல் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்படும்.