சென்னை: கொரோனா பணியின்போது சாலை விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு 50 லட்சம், அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணி மேற்கு கிராமத்தில் உள்ள சேதுராப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில், விமானம் மூலம் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் தனிமைபடுத்தப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார், நேற்று முன்தினம் தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பும் போது, மதுரை - சென்னை பைபாஸ் சாலையில், தனியார் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.