கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நம் நாட்டிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒரு சிலர் அலட்சியமாக இருந்தால்கூட இந்த வைரஸ் அதிவேகத்தில் பரவும் அபாயம் உண்டு. விலைமதிப்பற்ற உயிர்களை கொள்ளை நோய்க்கு பலி தராமல் தடுக்கும் நம்மால் இயன்ற நடவடிக்கைகள் தேவை.அதே வேளையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருமுன் காப்பது அவசியம். அந்த வகையில் கொரோனாவை வெல்வது எப்படி என்பது பற்றி சில தகவல்கள்: சானிடைசரால் கைகளை அடிக்கடி கழுவுவது, முககவசம் அணிவது, சமூக விலகளை கடைபிடிப்பது, இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூட கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது.