மதுரை: மதுரையில் 17ம் தேதி இறைச்சி கடைகளை திறக்க, கலெக்டர் வினய் தடை விதித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் சமூக இடைவெளி இல்லாமல், பொதுமக்கள் கூட்டமாக நின்று கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வரும் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.