சென்னை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். தற்போது தமிழகத்திலேயே சென்னை மாநகராட்சியில் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். சென்னையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: