நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில்வே போலீஸ் (மொபைல்) எஸ்ஐயாக இருப்பவர் சரவணன் முருகன் (56). மதுரை ரயில்வே டிஎஸ்பி இளங்கோ அறிக்கையின்படி இவரை சஸ்பெண்ட் செய்து திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார். திருச்சியிலுள்ள உயரதிகாரிகளிடம், எஸ்ஐ கிட் மற்றும் அவரது அடையாள அட்டையை ஒப்படைக்க வேண்டும். திருச்சியில் அவர் தங்கியிருக்க வேண்டும், வெளியூர் செல்ல வேண்டியிருந்தால் உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.