ஆண்டிபட்டி: வைகை அணை முன்பு உள்ள தடுப்பணை தண்ணீரில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. நீர்வரத்து இல்லாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 43.08 அடியாக உள்ளது. அணையின் முன்புறம் உள்ள தடுப்பணை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் மதுரை நகர் மற்றும் சேடபட்டி பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. அணையிலிருந்து குடிநீருக்காக தினமும் 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.