கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே கருத்தரிக்காமல், கன்று ஈனாமல் பசு ஒன்று தினமும் 7 லிட்டர் பால் கறந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கத்தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன்(40), நிலத்தடி நீர்வள நிபுணர். இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். 10 வயதுடைய இந்த பசுவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக அளிக்க முயற்சித்தார். ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் கோயிலில் ஏற்கனவே நிறைய பசுக்கள் இருப்பதால், இதனை நீங்களே வைத்து பராமரியுங்கள் என தெரிவித்தார்களாம்.தொடர்ந்து தயாளன், தனது பசுவுக்கு சினை ஊசி போடாமலும், கருத்தரிக்க முயற்சி செய்யாமலும் வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பசுவின் மடிகாம்புகள் திடீரென பெரிதாக ஆரம்பித்தது. இதை கவனித்த தயாளன், பசுவை ஏதாவது பூச்சிகள் கடித்து வீங்கியுள்ளதா என அதன் காம்பை தடவி பார்த்தார்.