பழநி: பழநியில் ரேஷன் அரிசியை பாஜ கட்சியினர் நிவாரணமாக வழங்கியதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தினக்கூலி தொழிலாளர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பியிருக்கும் சாலையோர வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பழநி புறநகர் சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமநாதன் நகர், மருத்துவ நகர் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பாஜ சார்பில் நிவாரண உதவி வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.