அம்பத்தூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் லெட்சுமி நாராயண ரெட்டி (56). டாக்டர். கடந்த மாதம் 4ம் தேதி கொரோனா தொற்று அறிகுறியுடன் அம்பத்தூர் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். மருத்துவமனை நிர்வாகம் அரசு அனுமதிபெற்று அம்பத்தூர் - அயப்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மின் எரிவாயு தகன மேடைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அவரது உடலை அந்த பகுதியில் தகனம் செய்யக்கூடாது என சிலர் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்களில் சிலர் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.