சிறப்பு ரத்ததான முகாம்

செங்கல்பட்டு:  கொரோனா வைரஸ்  வேகமாக பரவும்  நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இணைந்து  சிறப்பு ரத்ததான முகாம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் நந்தன் தலைமை வகித்தார். இதில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள வாலிபர் சங்க உறுப்பினர்கள், அரசு ஊழியர் சங்க உறுப்பினர்கள் என 101 பேர்  ரத்ததானம் செய்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், மாநில துணைத் தலைவர் பிரியசித்ரா,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: