ஊழியருக்கு கொரோனாவால் மூடப்பட்ட பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை மீண்டும் திறப்பு

சென்னை: ஊழியருக்கு கொரோனாவால் மூடப்பட்ட பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டது. பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் எழுத்தருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியானது. எழுத்தருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 40 பேருக்கு பரிசோதனை செய்யபட்டுள்ளது. பரிசோதனையில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதியானதை அடுத்து மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டது.

Related Stories: