ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப் பூ சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் அதிகாலையில் பறித்து, ஆண்டிபட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்வர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டனர். போதிய மழை இல்லாததால், ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தோட்டத்தில் உள்ள மல்லிகைச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம் பகுதிகளில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தேக்கி வைத்து, மின்மோட்டார் மூலம் மல்லிகைச் செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.