சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 3 இணை இயக்குநர்களை அதிரடியாக மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் உள்ள இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் இணை இயக்குநர் 3 பேர் நிர்வாக நலன் கருதி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இதன்படி, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் அமுதவல்லி, மதுரை பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.