கொரோனா தடுப்பு நடவடிக்கை துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆய்வு

சென்னை: வீட்டுவசதி வாரியம், குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று ஆய்வு நடத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தினார். மேலும் தொடர்ந்து  உரிய நடவடிக்கைகளை  விரைவாக  மேற்கொள்ளுமாறு   சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை  அரசு முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர்-செயலர் கார்த்திகேயன்,  தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் முருகேஷ், நிர்வாக இயக்குநர் கணேசன்  மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: