கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்

சென்னை: கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் திடீரென 10 ஆம் வகுப்பு தேர்வை அறிவித்திருப்பது சரியானதல்ல. கொரோனாவால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: