கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்தார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார். மேலும் லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

Related Stories: