மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற வந்த உள்ளூர் வியாபாரிகள் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் உள்ளது என்று இதுவரை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை. செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் கொரோனா அறிகுறி குறித்த சளி மற்றும் இரத்த பரிசோதனை நடந்தாலும், பரிசோதனை மேற்கொள்ளும் நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்ற தகவலை தினமும் நடக்கும் ரத்த பரிசோதனை முடிவுகளை வைத்து மாவட்ட கலெக்டர் தான் அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தி அறிவிப்பார்.