கொரோனா நோயாளிகளிடம் பாகுபாடு; சுருதி ஹாசன் புகார்

கொரோனா நோயாளிகளிடம் பாகுபாடு காட்டப்படுவதாக நடிகை சுருதி ஹாசன் புகார் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சுருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டும் போக்கு பற்றி படிக்கிறேன். இது வருத்தம் அளிக்கிறது. சிலர் பயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரம் நடக்கிறது. இதையெல்லாம் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கொரோனா நோயாளிகளிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: