மதுரை: மதுக்கடைகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நோய் எதிர்ப்புக்கு கபசுரக் குடிநீர் தரும் அரசு, மதுபானத்தை வழங்கலாமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தாக்கம் முடியும் வரை மது விற்பனையை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பொனிபாஸ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.