இதுபோன்ற நேரத்தில், மன்மோகன் சிங்கின் சேவை நமது நாட்டுக்குத் தேவை. அவர் விரைவில் உடல்நலன் பெறுவார் என நம்புகிறேன் : ஸ்டாலின் ட்வீட்

சென்னை : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று அவர் விரைவில் முழு உடல்நலன் பெறுவார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

காய்ச்சல் ஏற்பட்டதற்கான வேறு காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் கார்டியோடோராசிக் மையத்தின் மருத்துவர்கள் குழுவின் பராமரிப்பில், அவர் தற்போது நிலையான உடல்நிலையில் உள்ளார்” என்ற தகவலை கூறியுள்ளது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேட்டு, அவர் விரைவில் குணமடைய வேண்டி திமுக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன்.இதுபோன்ற நேரத்தில், டாக்டர். மன்மோகன் சிங்கின் சேவை நமது நாட்டுக்குத் தேவை. அவர் விரைவில் முழு உடல்நலன் பெறுவார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: