டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு நேற்று இரவு அவரது வீட்டில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் இரவு 8.45 மணி அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள இருதய சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கை, கார்டியாலஜி பேராசிரியர் டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 87 வயதாகும் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2009ம் ஆண்டு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.