கவனக்குறைவால் விடுதலை செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் ஆந்திராவில் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து கடந்த ஆண்டு ஆக்டோபர் 24ம் தேதி தமிழகத்திற்கு 187 கிலோ  கஞ்சா கடத்திய ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ராமசிவா, முரளி ஆகியோரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி ெசய்தது.சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விசாரணை மற்றும் சிறிய குற்ற வழக்கு கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

அப்போது கவனக்குறைவாக ஜெயிலர் குணசேகர் கஞ்சா வழக்கில் கைதான 2 குற்றவாளிகளையும் கடந்த 4ம் தேதி விடுதலை செய்தார்.

விசாரணையில், அவர்களை தவறுதலாக வெளியில் விட்டது தெரிந்தது. உடனே, ஜெயினர் குணசேகர் தலைமையிலான தனிப்படையினர் ஆந்திரா நரசிங்கப்பட்டினத்தில் இருந்த 2 குற்றவாளிகளையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்த பூந்தமல்லி துணை சிறையில் அடைத்தனர்.

Related Stories: