சென்னை: கொரோனாவுக்காக கவிஞர் வைரமுத்து அழகான கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும் என்று தலைப்பு வைத்துள்ள வைரமுத்துவின் இந்த கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த கவிதை:
ஞாலமளந்த ஞானிகளும்சொல் பழுத்த கவிகளும்சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்கொரோனா சொன்னதும்குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்இந்தத் தொண்டைக்குழி நண்டுக்குநுரையீரல்தான் நொறுக்குத் தீனிஅகிலத்தை வியாபித்திருக்கும் இந்தத்தட்டுக்கெட்ட கிருமியின்ஒட்டுமொத்த எடையேஒன்றரை கிராம்தான்இந்த ஒன்றரை கிராம்உச்சந்தலையில் வந்து உட்கார்ந்ததில்உலக உருண்டையே தட்டையாகிவிட்டது!சாலைகள் போயின வெறிச்சோடிபோக்குவரத்து நெரிசல்மூச்சுக் குழாய்களில்.தூணிலுமிருப்பதுதுரும்பிலுமிருப்பதுகடவுளா? கரோனாவா?இந்த சர்வதேச சர்வாதிகாரியைவைவதா? வாழ்த்துவதா?தார்ச்சாலையில் கொட்டிக் கிடந்தநெல்லிக்காய் மனிதர்கள் இன்றுநேர்கோட்டு வரிசையில்சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகைஇன்று வட்டத்துக்குள்உண்ட பிறகும் கைகழுவாத பலர் இன்றுஉண்ணு முன்னேபுகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலைஇன்றுதான்முகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறதுமாதமெல்லாம் சூதகமானகங்கை மங்கைஅழுக்குத் தீரக் குளித்துஅலைக் கூந்தல் உலர்த்திநுரைப்பூக்கள் சூடிக்கண்சிமிட்டுகின்றாள்கண்ணாடி ஆடைகட்டி.குஜராத்திக் கிழவனின்அகிம்சைக்கு மூடாத மதுக்கதவுகொரோனாவின் வன்முறைக்கு மூடிவிட்டதே!ஆனாலும்அடித்தட்டு மக்களின்அடிவயிற்றிலடிப்பதால்இது முதலாளித்துவக் கிருமி.மலையின்தலையிலெரிந்த நெருப்பைத்திரியில் அமர்த்தியதிறமுடையோன் மாந்தன்இதையும் நேர்மறை செய்வான்.நோயென்பதுபயிலாத ஒன்றைப்பயிற்றும் கலை.குருதிகொட்டும் போர்குடல் உண்ணும் பசிநொய்யச் செய்யும் நோய்உய்யச் செய்யும் மரணம்என்ற நான்கும்தான்காலத்தை முன்னெடுத்தோடும்சரித்திரச் சக்கரங்கள்பிடிபடாதென்று தெரிந்தும்யுகம் யுகமாய்இரவைப் பகல் துரத்துகிறதுபகலை இரவு துரத்துகிறதுஆனால்விஞ்ஞானத் துரத்தல்வெற்றி தொடாமல் விடாதுமனித மூளையின்திறக்காத பக்கத்திலிருந்துகொரோனாவைக் கொல்லும் அமுதம்கொட்டப் போகிறதுகொரோனா மறைந்துபோகும்பூமிக்கு வந்துபோனதொரு சம்பவமாகும்ஆனால்,அதுகன்னமறைந்து சொன்னகற்பிதங்கள் மறவாதுஇயற்கை சொடுக்கியஎச்சரிக்கை மறவாதுஏ சர்வதேச சமூகமே!ஆண்டுக்கு ஒருதிங்கள்ஊரடங்கு அனுசரிகதவடைப்பைக் கட்டாயமாக்குதுவைத்துக் காயட்டும் ஆகாயம்கழியட்டும் காற்றின் கருங்கறைகுளித்து முடிக்கட்டும் மானுடம்முதுகழுக்கு மட்டுமல்லமூளையழுக்குத் தீரவும்.