சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் அனைத்து சார்பு நீதிமன்றங்களும் பணிகளை நிறுத்தின. அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் குமரப்பன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு தொடங்கியதிலிருந்து மே 7ம் தேதி,வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 26 முதல் மே 7ம் தேதிவரை 732 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.