சென்னை: சென்னையில் பயிற்சி மருத்துவர் அர்ஜுன் என்பவர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். விருகம்பாக்கத்தை சேர்ந்த அர்ஜுன், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்தார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.