சென்னை: தமிழகம் முழுவதும் 24 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையேயும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த பகுதிகளில் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை எண்ணூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி உட்பட 8 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றி வரும் 14 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.