மீனம்பாக்கம்: அபுதாபியில் இருந்து சென்னைக்கு மருத்துவ உபகரண பார்சலில் கடத்தப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள சிகரெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வளைகுடா நாட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு சரக்கு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், மருத்துவ உபகரணங்கள் அதிகளவில் வந்திருந்தன. இவை, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கான உபகரணங்கள் என்பதால், சுங்க சோதனையை விரைந்து முடித்து டெலிவரி கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுங்க அதிகாரிகள் மருத்துவ உபகரணங்கள் வந்த பார்சல்களை விரைவாக ஆய்வு செய்தனர். அப்போது, அபுதாபியிலிருந்து தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரிக்கு மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் 6 பார்சல்கள் வந்திருந்தன.