இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர், சென்னை அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனையடுத்து, கடந்த 4ந்தேதி அவர் கொரோனா பரிசோதனைக்கு  உட்படுத்தி கொண்டார். இதற்கிடையில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி ஆனது. இதனையடுத்து, அவரை சுகாதார அதிகாரிகள் மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அவரது குடும்பத்திற்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அவர் வசிக்கும் தெருவை சீல் வைத்தனர்.

Related Stories: