தூத்துக்குடி அருகே சுவரில் மோதி மான் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஊருக்குள் தவறி வந்த புள்ளிமான் சுவரில் மோதி பலியானது.தூத்துக்குடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் நேற்று காலை பண்டாரம்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்தது. அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் மானை துரத்தியதால் தப்பிச் செல்ல அங்குமிங்கும் ஓடியது. இதில் எதிர்பாராத விதமாக சுவரில் மோதியதில் மானின் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், மானின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கடந்த வாரமும் இதுபோல ஒரு மான் ஊருக்குள் வந்து அங்குமிங்கும் ஓடி சுவரில் மோதி இறந்தது குறிப்பிடத்தக்கது.இந்த மான்கள் விளாத்திகுளம் அல்லது பசுவந்தனை காட்டுப்பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து மான்கள் பலியாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: