புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மீது அவதூறு குற்றம்சாட்டிய 2 வக்கீல்கள் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றும் இரு நீதிபதிகள் மீது கடந்த ஏப்ரல் 27ம் ேததி மகாராஷ்டிரா மற்றும் கோவா வக்கீல்கள் சங்கத் தலைவர் விஜய் குர்லே, இந்திய பார் அசோஷியேஷன் தலைவர் வக்கீல் நீலேஷ் ஓஷா, தேசிய மனித உரிமை தன்னார்வலர் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் கான் பதான் ஆகியோர் அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீபக்குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வு முன் கடந்த 4ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மீது அவதூறு குற்றம்சாட்டிய வக்கீல் உள்பட 3 பேருக்கு சிறை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- நபர்கள்
- நீதிபதிகள்
- வழக்கறிஞர்
- உச்ச நீதிமன்றம்
- உச்சநீதிமன்றம் இரண்டு நீதிபதிகளின் அவதூறு குற்றச்சாட்டு
- நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது