திருவள்ளூர்: திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 126 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் சென்னை காவல் மாவட்டத்தை ஒட்டியுள்ள செவ்வாப்பேட்டை, மீஞ்சூர், சோழவரம், வெள்ளவேடு, வெங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் முழுமையாக இயங்காது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளை ஒட்டி 66 கடைகளும் இன்று முதல் இயங்காது.மற்ற 40 கடைகள், அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 50 டோக்கன் வீதம் வழங்கப்படும்.