இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும்,  இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரி நியமனம்  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை:

வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும், இ-பாஸ் வழங்குவதை கண்காணிக்க கட்டுப்பாட்டறை அமைத்து அதற்கான அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறையின் சிறப்பு செயலாளர் பின்கி ஜோவல், தமிழ்நாடு கேபிள் டிவி பொது மேலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் பொதுமேலாளர் சாந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: