சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் சந்திரசேகர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. நாட்டைப் பாதுகாக்க தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மரணம் அடைந்தார் என்பது நாட்டிற்கு பெருமை. தமிழகத்துக்குப் பெருமை. மேலும் பாதுகாப்பு படையினைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.