சென்னை: சென்னை வேளச்சேரியில் கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறி வாங்கி வந்து வண்டியில் வீதி வீதியாக காய்கறி விற்பனை செய்யும் நபர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்கறி விற்பனை செய்யும் நபர் மற்றும் அவரது மகனுக்கு முதலில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று பரவியுள்ளது.