சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமாகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பொது நோக்கத்தில் வேதா இல்லம் அரசு நினைவிடமாக்கப்படுகிறழ எனவும் கூறினார். நில எடுப்பு மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். யாரையும் அப்புரப்படுத்தவோ, மறுகுடியமர்த்தவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை என கூறினார்.