கடந்த சில நாட்களுக்கு முன் தனது அறக்கட்டளை மூலம் கொரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய் தேவரகோண்டா, நியாயமான உதவி தேவைப்படுபவர்கள் தனது இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் சொல்லியிருந்தார். இதற்காக விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை தரலாம் என்று அறிவித்தார். அதன்படி சில நாட்களில் சுமார் 70 லட்சம் ரூபாய் நன்கொடை சேர்ந்தது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா பற்றி தெலுங்கு இணையதளத்தில் தவறான கருத்து வெளியானது. நன்கொடை எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.