சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதியதில் ஆயுதப்படை பெண் காவலர் உயிரிழந்துள்ளார். சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த மகளிர் போலீஸ் பவித்ரா. இவர் இன்று நந்தனத்தில் பணிபுரிவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாரதி சாலையில் இருந்து சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு திரும்பும் போது, பாரிஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பவித்ரா எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிக்கொண்டார். அத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.