சென்னை: டீசல் மற்றும் பெட்ரோல் மீது மாநில வரி விதிப்பை மாற்றி அமைத்ததின் காரணமாக மாநில அரசிற்கு ஓராண்டிற்கு ரூபாய் 25,000 முதல் ரூபாய் 30,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்கிற ஒரு தவறான செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி விதிப்பால் மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது தவறான செய்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வரி விதிப்பால் ரூ.25,000 முதல் ரூ.30,000 கோடி வரை கிடைக்கும் என்பது தவறான செய்தி. டீசல் மற்றும் பெட்ரோல் மீதான மாநில வரியை மாற்றி அமைத்ததின் காரணத்தினால், தற்போதுள்ள நுகர்வின் அடிப்படையில், டீசல் விலை ரூ.2.50 மற்றும் பெட்ரோல் விலை ரூபாய் 3.25 மட்டுமே உயரும்.