சென்னை: உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும் இவற்றை அரசு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.