சென்னை: தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இலவச உணவு மூலம் நாள்தோறும் பல லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடைந்த நிலையில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் வழங்கிய நிதிமூலம் அம்மா உணவகங்களில், இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.