கூவம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி வாலிபர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருமணம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (19). நேற்று மதியம் தனது நண்பர்களுடன் கொத்தியம்பாக்கம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அவரது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களுடன் வெள்ளவேடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி தேடினர்.  ஒரு மணிநேரம் போராடி கார்த்திக் உடலை சடலமாக மீட்டனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளவேடு போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: