கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நேற்று இருவரும் இன்ஸ்ட்ராகிராமில் கலந்துரையாடினார்கள் அப்போது கமல்ஹாசன் அரசியலுக்கு தாமதாக வந்தது ஏன் என்பது குறித்து அளித்த விளக்கம் வருமாறு: உன்னுடைய எந்த சினிமாவில் அரசியல் இல்லை என்று நெருங்கிய நண்பர்கள் சொல்வார்கள். உற்றுக் கவனித்தால் அனைத்திலும் ஒரு கொட்டு இருக்கும். அடி இருக்கும். ஏதாச்சும் ஒன்று வைத்திருப்பேன். வறுமையின் நிறம் சிவப்பு காலத்திலிருந்து சொல்றேன். ரொம்ப தைரியமான சில கருத்துக்கள் எல்லாம் சொல்லியிருப்போம். சத்யா படத்தில் நேரடியாக அரசியலே பேசியிருப்போம்.