சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலை தடுக்க சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுடைய சில குறிப்பிட்ட அத்தியாவசிய நிகழ்ச்சிகளான முன்கூட்டியே ஏற்பாடு செய்த திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி சீட்டு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழ்நாடு அரசு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக வாயிலாக //tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே அவரச அனுமதி சீட்டு வழங்க உத்தரவிட்டுள்ளது.