சென்னை: குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணிமங்கலம் பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் பொதுமக்கள் குளித்தும், துணி துவைத்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மணிமங்கலம் - கரசங்கால் சாலை பழத்தோட்டம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சித்ரா (35), திலகா (40) இவரது மகள்கள் பூர்ணிமா (8), கலையரசி (16), சத்யா (13) ஆகியோர் இந்த ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளனர்.
அங்கு, சித்ரா மற்றும் திலகா ஆகியோர் ஏரிக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சிறுமிகள் மூவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிக் கொண்டே ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர்.