கட்டுமான தொழிலாளர், டிரைவர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு

சென்னை: கொரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வா தாரம் டிரைவர்களுக்கு பாதிக்கப்பட்ட  வாடகை வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்ற டிரைவர்களுக்கு, மாதம் தலா 5 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும், அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பிலும் நிவாரணம் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: