சென்னை: தமிழகத்தில் இனிமேல் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.
தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், பொதுமக்களில் பலர் அதன் சட்ட விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காமலும், சமூக இடைவெளி தவிர்த்தும், உத்தரவுகளை மீறியும் செயல்பட்டு வருகின்றனர். இத்தடை உத்தரவுப்படி 5 நபர்களுக்கு மேல் எந்த இடத்திலும், எக்காரணத்திற்காகவும் கூடுவது சட்டவிரோதமானது. இச்சட்டம் அனைத்து சமூக, சமய மற்றும் மதம் சார்ந்த விழாக்கள், வழிபாடுகள் மற்றும் கூட்டங்களுக்கும் முழுமையாக பொருந்தும். ஆகவே ெபாதுமக்கள் 144 தடை உத்தரவு நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை மீண்டும் வலியுறுத்துகிறது.