ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த தியேட்டர்களை பராமரிப்பது சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர்கள் திறப்பது சில மாதங்களுக்கு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. இதற்கிடையே தியேட்டர்கள் திறப்பு இப்போதைக்கு சாத்தியம் இல்லாததால் இணையதளத்தில் புதிய படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த விவகாரங்களால் தியேட்டர் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து ஊரடங்கு முடிந்ததும் எப்படியாவது தியேட்டர்களை திறந்து விட வேண்டும் என்று அவர்கள் அவசரம் காட்டி வருகின்றனர்.